முகப்பு
உலகம்

ரஷிய மருத்துவமனையில் பயங்கர தீ விபத்தில் 20 பேர் பலி

ரஷியாவின் அவசரகாலத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சனிக்கிழமை சிறிய மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 20 பேர் பலியாகினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:11 AM
ரஷிய மருத்துவமனையில் பயங்கர தீ விபத்தில் 20 பேர் பலி
பகிர்:

மாஸ்கோ: ரஷியாவின் அவசரகாலத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சனிக்கிழமை சிறிய மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 20 பேர் பலியாகினர்.

கெமெரோவோவில் உள்ள சைபீரியன் நகரில் இயங்கி வந்த இரண்டு அடுக்கு மரத்தால் ஆன சிறிய மருத்துவமனையில் இந்த தீ விபத்து நேரிட்டுள்ளது.

மாஸ்கோவிலிருந்து 3,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தப் பகுதியில் உள்ள சிறிய தனியார் மருத்துவமனையில் தீ விபத்து நேரிட்ட போது எத்தனை பேர் உள்ளே இருந்தனர் என்பது  குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

முழு கட்டுரையைப் படிக்க →