புதினுக்கு எதிராக போராட்டம் நடத்திய 1,800 பேர் கைது
ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராட்டம் நடத்திய 1,800க்கும் மேற்பட்டோரை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.
ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராட்டம் நடத்திய 1,800க்கும் மேற்பட்டோரை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு ரஷிய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் மாஸ்கோ, செயின்பீட்டர்ஸ்பெர்க் உள்ளிட்ட 56 நகரங்களில் அதிபர் புதினுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 1,800க்கும் மேற்பட்டோரை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டங்களில் ஈடுபடும் ரஷியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள புதின், உக்ரைனில் ரஷிய மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலைகளை தடுக்க ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிக்க | உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிப்பாரா புதின்?