முகப்பு
உலகம்

உக்ரைனுக்கு ரூ. 4,500 கோடி நிதியுதவி: அமெரிக்கா ஒப்புதல்

ரஷியாவுக்கு எதிரான போர்ச்சூழலில் உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர்(4500 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

ரஷியாவுக்கு எதிரான போர்ச்சூழலில் உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர்(4500 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் இன்று 3-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. தரைவழி, வான்வழி, கடல்வழி என மூன்று முனைகளிலும் ரஷியா ஆக்ரோஷத் தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது. 

முன்னதாக, உதவி கேட்டும் உக்ரைனுடன் போரிட உலக நாடுகள் முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் நிலவரம் குறித்து அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இது இந்திய மதிப்பில் ரூ. 4,500 கோடி ரூபாய். 

இதில், ராணுவ உதவிக்காக உடனடியாக 250 மில்லியன் டாலர்(ரூ. 1,875 கோடி) வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு, கல்விக்கு உதவ 350 மில்லியன் டாலர்(ரூ. 2,626 கோடி)  உதவி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →