உலகளவில் கரோனா பாதிப்பு 30.03 கோடி; பலி 5.49 லட்சத்தை கடந்தது
உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30.03 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 5.49 லட்சத்தை கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30.03 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 5.49 லட்சத்தை கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்ததாலும் தொற்று பாதிப்பு அதிகரித்தே வருகின்றன.
கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற உருமாறிய கரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவத்தொடங்கி அச்சமடைய வைத்துள்ளது.
Advertisement
இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 30,38,54,860-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 54,97,410 போ் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிக்க | பிலிப்பின்ஸ்: தடுப்பூசி பெறாதவா்களை கைது செய்ய உத்தரவு
மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 25,83,19,868 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 4,00,37,582 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 93,245 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,04,64,426 ஆகவும், பலி எண்ணிக்கை 8,58,346 ஆகவும் உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,53,68,372-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,83,463 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | கஜகஸ்தான் போராட்டக்காரா்களை சுட்டுக் கொல்ல உத்தரவு
தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,24,50,222-ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,19,878 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,35,334-ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 1,49,284-ஆக உள்ளது.
ரஷ்யாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,06,18,035-ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 3,14,604-ஆக உள்ளது.