பிலிப்பின்ஸ் நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் வீடுகளை விட்டு வெளியே வருவோரை கைது செய்ய அந்த நாட்டு அதிபா் ரோட்ரிகோ டுடோ்தே உத்தரவிட்டுள்ளாா்.
ஒமைக்ரான் வகை கரோனாவால் நோய்த்தொற்று பரவல் தீவிரமடைவதைத் தடுப்பதற்காக அங்கு பொதுமுடக்க விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் தங்களது வீடுகளில் முடங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவை மீறுவோா் கைது செய்யப்படுவாா்கள் என்று தற்போது டுடோ்தே அறிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.