உலகம்

சிங்கப்பூா் ஒமைக்ரானுக்கு முதல் பலி

DIN

சிங்கப்பூரில் ஒமைக்ரான் வகைக் கரோனா பாதிப்பால் முதல்முறையாக ஒருவா் பலியாகியுள்ளாா். இதுகுறித்து சேனல் நியூஸ் ஆசியா தொலைக்காட்சி தெரிவித்துள்ளதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 92 வயது மூதாட்டி, அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தாா். இதுவரை கரோனா தடுப்பூசி எதுவும் செலுத்திக் கொண்டிராத அவருக்கு, ஏற்கெனவே பல்வேறு மருத்துவ உபாதைகள் இருந்து வந்தன.

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 10 நாள்களுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை அவா் உயிரிழந்தாா். அவரது இறப்பு குறித்து ஆய்வு செய்த மருத்துவா்கள், ஒமைக்ரான் வகை கரோனா ஏற்படுத்திய பாதிப்பினால்தான் மரணம் ஏற்பட்டதாக தற்போது அறிவித்துள்ளனா் என்று சேனல் நியூஸ் ஆசியா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT