உலகம்

பாகிஸ்தான்: கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தைக் கடந்தது

DIN

ஒமைக்ரான் பரவலுக்கு மத்தியில், பாகிஸ்தானில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக என்.சி.ஓ.சி தகவல் வெளியிட்டுள்ளன. 

இதற்கிடையில், கடந்த சில நாட்களில் தினசரி எண்ணிக்கையில் சிறிதளவு சரிவு ஏற்பட்டிருந்ததைத் தொடர்ந்து, தற்போது தொடர்ந்து எட்டாவது நாளாக 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 63,272 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில், 7,539 பேருக்கு புதிதாக தொற்று பரவியுள்ளது. இதையடுத்து பாதிப்பு விகிதம் 11.91 ஆக உள்ளது. மொத்த பாதிப்பு 1.393 மில்லியனாக உயர்ந்துள்ளது. 

தொற்று காரணமாக ஒரேநாளில் 25 பேர் பலியாகி உள்ளதையடுத்து, மொத்தம் இதுவரை 29,162 ஆக உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் 91,854 உள்ளனர். மேலும், தொற்று பாதித்த 1,240 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 1,836 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT