உலகம்

ஷின்சோ இறப்புக்கு இதுதான் காரணம்: சிகிச்சையளித்த மருத்துவர்கள் விளக்கம்

ஷின்சோ அபே இறப்புக்கு துப்பாக்கி குண்டு அவரது இதயத்தை துளைத்து அதிக அளவில் ரத்தப் போக்கை ஏற்படுத்தியதே காரணம் என அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

DIN

ஷின்சோ அபே இறப்புக்கு துப்பாக்கி குண்டு அவரது இதயத்தை துளைத்து அதிக அளவில் ரத்தப் போக்கை ஏற்படுத்தியதே காரணம் என அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில்,  அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது இறப்பிற்கு என்ன காரணம் என்பதை தெரிவித்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: “ முன்னாள் பிரதமர் அபேவின் உடலில் இரண்டு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அதில் ஒரு துப்பாக்கி குண்டு அவரது இதயத்தை துளைத்துள்ளது. அதனால், அவருக்கு அதிக அளவிலான ரத்தப் போக்கு ஏற்பட்டது. சிகிச்சையின் போது ரத்தப் போக்கினை நிறுத்த முயற்சித்தும் பலனளிக்கவில்லை. அதன் காரணத்தினாலேயே அவர் உயிரிழந்தார்.” என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

12.2.1976: த.நா. திட்டம் - சேலம் உருக்காலை, நெய்வேலி சுரங்க ஒதுக்கீடுகள் உயரலாம்

மும்பை மேயராக ரீத்து தாவ்டே போட்டியின்றி தோ்வு - 44 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜக மேயா்

இந்தியா வரி குறைக்கும் பொருள்கள் பட்டியல்: பருப்பு வகைகளை நீக்கியது அமெரிக்கா

தமிழகம், புதுவை சட்டப் பேரவைத் தோ்தல்: தோ்தல் ஆணைய அதிகாரிகள் குழு சென்னை வருகை

போலி மருத்துவா்கள் மூலம் முடி மாற்று சிகிச்சை: கண்காணிப்பதில் நிலவும் சிக்கல்

SCROLL FOR NEXT