மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது.
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் உள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக அந்நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இதையும் படிக்க: உலகை வியப்பில் ஆழ்த்திய தொலைநோக்கி: யார் இந்த ஜேம்ஸ் வெப்?
இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் தரப்பிலிருந்து ‘எல்லா நிறுவனங்களைப் போல நாங்களும் வழக்கமான அடிப்படையில் வணிகம் செய்கிறோம். அதன் காரணமாக, மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இங்கு பணியாற்றும் 1,81,000 ஊழியர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களை பணிநீக்கம் செய்துள்ளோம். மேலும், சில திட்டங்களில் முதலீடு செய்ய உள்ளதால் அடுத்த ஆண்டு அதிகமான புதிய ஊழியர்களை பணியமர்த்துவோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.