உலகம்

இலங்கையின் நிலைக்கு ரஷியாதான் காரணம்: ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

இலங்கையின் தற்போதைய நிலைக்கு உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கையும் ஒரு காரணம் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

DIN

இலங்கையின் தற்போதைய நிலைக்கு உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கையும் ஒரு காரணம் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு 5 மாதங்களைக் கடந்து தொடர்ந்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் இரு நாடுகள் போரிட்டு வருகின்றன. 

இந்நிலையில், தென் கொரியாவின் சியோலில் ஆசிய தலைமைத்துவ மாநாட்டின்போது உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஜெலென்ஸ்கி, ரஷியப் படையெடுப்பு குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பிரச்னை குறித்தும் பேசினார். 

அப்போது, 'உலகளாவிய உணவு நெருக்கடி மற்றும் பணவீக்கத்தை ரஷியா உருவாக்கி வருகிறது. கருங்கடல் பகுதியினை ரஷியா முற்றுகையிட்டுள்ளதால் ஏற்றுமதி தடைபட்டுள்ளது. 

அந்தவகையில், இலங்கையின் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கையும் ஒரு காரணம். உணவு மற்றும் எரிபொருள்கள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடுதான் ஒரு சமூகப் புரட்சிக்கு காரணமானது. இது எப்படி முடிவடையும் என்று இப்போது யாருக்கும் தெரியாது' என்று கூறினார். 

உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் உலகச் சந்தைக்கான 2 கோடி டன் தானியங்கள் சிக்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் அபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைனின் ஐம்பது சதவீதத்திற்கும் மேலான ஏற்றுமதி அதன் முக்கிய கருங்கடல் துறைமுகமான ஒடேசா வழியாக அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“VIJAY தேவையான விளக்கத்தை அளித்துள்ளார்! மீண்டும் ஆஜராவார்!” தவெக நிர்மல் குமார்

ராமராஜன் - கனகா சந்திப்பு!

அரிய வகை நட்சத்திர ஆமை மீட்பு!

தில்லியில் ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் சீனாவின் ஆளுங்கட்சியினர் சந்திப்பு!

ஊர்க்காவலர் பணியில் திருநங்கைகள்! பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்!

SCROLL FOR NEXT