வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ கடற்கரையில் கரையொதுங்கிய 8 அகதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன.
அவா்கள் சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது; இது தவிர, மற்றொரு படகில் சிக்கித் தவித்த மேலும் 18 அகதிகள் மீட்கப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி மொராக்கோ வழியாக அதிகள் பயணிப்பது அதிகரித்து வருகிறது.