உலகம்

மகிந்த ராஜபட்ச, பசில் ராஜபட்ச ஆக. 2 வரை இலங்கையை விட்டு வெளியேறத் தடை!

DIN

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபட்ச ஆகிய இருவரும் இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி சூழலுக்கு இடையே அங்கு அரசியல் குழப்பங்களும் இருந்து வருகின்றன. தற்போது புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்தன தேர்வாகியுள்ளார். 

இந்நிலையில், இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச, முன்னாள் நிதியமைச்சரும் மகிந்த ராஜபட்சவின் சகோதரருமான பசில் ராஜபட்ச ஆகிய இருவரும் இலங்கையை விட்டு வெளியேற இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. 

இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில் தடையை ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT