அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஏற்கெனவே இரு தவணை கரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்ட நிலையில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் புதன்கிழமை மேற்கொண்ட பரிசோதனையில் ஜோ பைடன் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தது உறுதி செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.