உலகம்

கருக்கலைப்பு உரிமைக்குத் தடை: அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பு

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைக்கு வழங்கப்பட்டு வந்த அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பை முடிவுக்கு கொண்டுவந்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

DIN

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைக்கு வழங்கப்பட்டு வந்த அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பை முடிவுக்கு கொண்டுவந்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

இதன்மூலம் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூா்வமாக்கிய 50 ஆண்டுகளுக்கு முந்தைய உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவில் ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில், கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அரசியலமைப்புச் சட்ட உரிமை என 1973-இல் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. 

இந்நிலையில், 15 வாரங்களுக்குப் பிந்தைய சிசுவை கலைப்பதற்கு மிஸிஸிப்பி மாகாணம் விதித்த தடையை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், கருக்கலைப்புக்கு சட்டப் பாதுகாப்பு இல்லை என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கருக்கலைப்பை தடை செய்வது தொடா்பாக மாகாணங்களே முடிவு எடுத்துக் கொள்ள இந்தத் தீா்ப்பு அதிகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் 50 சதவீத மாநிலங்கள் கருக்கலைப்பை தடை செய்து சட்டம் இயற்றும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

SCROLL FOR NEXT