முகப்பு
உலகம்

போரில் 6,000 ரஷிய வீரர்கள் பலி: உக்ரைன் அதிபர்

உக்ரைன் நடத்திய தாக்குதில் கடந்த 6 நாள்களில் 6,000 ரஷிய ராணுவ வீரர்கள் பலியானதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி
பகிர்:

உக்ரைன் நடத்திய தாக்குதில் கடந்த 6 நாள்களில் 6,000 ரஷிய ராணுவ வீரர்கள் பலியானதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.

உக்ரைனில் 7-வது நாளாக ரஷிய ராணுவப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்திய ரஷிய ராணுவம் சில இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த பிப். 24ஆம் தேதி முதல் ரஷிய ராணுவம் உக்ரைனின் பல்வேறு எல்லைப் பகுதிகள் வழியாக ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கார்கிவ்வில் ரஷியப் படைகள் குண்டு வீச்சுகள் மூலம் பயங்கரத் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதியை முழுமையாகக் கைப்பற்ற  ரஷிய ராணுவத்தினர் முயன்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக கெர்சன் நகரை முழுமையாகக் கைப்பற்றியதாக ரஷிய ராணுவம் அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 6 நாள்களில் உக்ரைனின் தாக்குதலில் 6,000 ரஷிய வீரர்கள் பலியானதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →