உக்ரைன் மீது ரஷியா இதுவரை 500 ஏவுகணைகளை வீசித் தாக்குதல்: அமெரிக்கா தகவல்
உக்ரைன் மீது ரஷியா இதுவரை 500 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா இதுவரை 500 ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா 10 ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள ரஷியப் படை நேற்று உக்ரைனின் மிகப்பெரிய சப்போரிஜ்ஜியா அணு உலை மீதும் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், ரஷியப் படை உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கியதில் இருந்து 500 ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இருவேறு விதமான ஏவுகணைகளை ரஷியா பயன்படுத்தியுள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24 ஏவுகணைகளை வீசியுள்ளதாகவும் கூறியுள்ளது.
உக்ரைனில் இதேநிலை நீடித்தால் உயிர்ப்பலி அதிகரிக்கும் என்று நேட்டோ தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | உக்ரைனை ரஷியா தாக்குவதன் உள்(ள)நோக்கம் என்ன? அலசல் ரிப்போர்ட்!