கோப்புப்படம் 
உலகம்

நேபாளம்: பேருந்து கவிழ்ந்து விபத்து; 2 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி

கிழக்கு நேபாளத்தின் சங்குவாசபா மாவட்டத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட  14 பேர் பலியாகினர்.

DIN

காத்மாண்டு: கிழக்கு நேபாளத்தின் சங்குவாசபா மாவட்டத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட  14 பேர் பலியாகினர். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் 5 பேர் விமானம் மூலம்  சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சங்குவாசபாவில் இருந்து டமாக் நோக்கிச் சென்ற பேருந்து, மதி நகரில் காலை 7 மணியளவில் விபத்துக்குள்ளானது என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துணை காவல் ஆய்வாளர் லால் த்வாஜ் சுபேதி இறந்த 14 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டு அவர்களின் அடையாளங்களை கண்டறிந்தார்.

அதிவேகமாக பேருந்து சென்றதால்  விபத்து ஏற்பட்டிருக்கலாம் என  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பேருந்தில்  19 முதல் 21 பேர் பயணம் செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  காயமடைந்தவர்கள் செயின்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT