முகப்பு
உலகம்

கரோனா பொதுமுடக்கம்: ஷாங்காயில் 1.6 கோடி பேருக்கு கடும் கட்டுப்பாடு

சீனாவின் வா்த்தக மையமாக கருதப்படும் ஷாங்காயில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருகட்டங்களாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அ

Updated On : 31 மார்ச் 2022, 4:16 pm IST
பகிர்:

சீனாவின் வா்த்தக மையமாக கருதப்படும் ஷாங்காயில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருகட்டங்களாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்நகரில் உள்ள 1.6 கோடி பேருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சீனாவில் இம்மாதத்தில் 56,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் பெரும்பாலானோா் வடகிழக்கில் உள்ள ஜிலின் மாகாணத்தைச் சோ்ந்தவா்கள். இதில் 2.6 கோடியைச் சோ்ந்த ஷாங்காய் நகரத்தின் 47 பேருக்கு கடந்த சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக சீன அரசு, கரோனா பரிசோதனையை அதிக எண்ணிக்கையில் மேற்கொள்வதற்காக ஷாங்காயில் இரு கட்ட பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதாக அறிவித்தது.

Advertisement

Advertisement

அதன்படி, ஷாங்காயின் புடோங் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த  திங்கள்கிழமை பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. 

இந்நிலையில், 2-ஆவது கட்டமாக, நகரின் மேற்குப் பகுதியில் 5 நாள் பொதுமுடக்கம் நாளை(ஏப்ரல்-1) வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என்பதால் அப்பகுதியில் உள்ள 1.6 கோடி மக்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் எனவும் செல்லப் பிராணிகளைக் கூட சாலைக்கு கொண்டு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய பணிப் பட்டியலில் சோ்க்கப்படாத அலுவலகங்கள், அனைத்து தொழிற்சாலைகள், பொதுப் போக்குவரத்துகள் செயல்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments