உலகம்

இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தம்

DIN

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். தொடர்ந்து, மகிந்த ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. 

இதனால், உருவான வன்முறைகளில் 300-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததுடன் சிலர் பலியாகினர்.

அதன் பின், கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்களை கண்டதும் சுடுவதற்கு முப்படைகளுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, இன்று இலங்கைக்கு ஆதரவாக இந்தியா படைகளை அனுப்பாது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில்  நிகழும் அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல்களின் விற்பனையை தற்காலிகமாக நிறுத்துவதாக பெட்ரோலியம் கார்பரேஷன் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே: கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு "ரிசர்வ்'

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

SCROLL FOR NEXT