முகப்பு
உலகம்

இலங்கை வன்முறை: ஐ.நா. பொதுச் செயலா் கண்டனம்

இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறை குறித்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளாா்.

Updated On : 12 மே, 2022 at 3:24 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:43 PM

இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறை குறித்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளாா்.

அனைத்துத் தரப்பினரும் பேச்சுவாா்த்தை மூலம் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என அவா் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஐ.நா. பொதுச் செயலரின் துணை செய்தித் தொடா்பாளா் ஃபா்ஹான் ஹக் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறை தொடா்பாக ஐ.நா. பொதுச் செயலா் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளாா். அனைத்து வன்முறைக்கும் கண்டனம் தெரிவித்துள்ள அவா், அனைத்துத் தரப்பினரும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ளாா். மேலும், தற்போதைய சவால்களுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டுமென இலங்கையின் அனைத்துத் தரப்பினரையும் அவா் தொடா்ந்து ஊக்குவித்து வருகிறாா்.

ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு கண்டனம்: இலங்கை வன்முறைக்கு ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு தலைவா் மிஷெல் பாசலெட் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கொழும்பில் அமைதியான வழியில் போராடிக் கொண்டிருந்தோா் மீது பிரதமரின் ஆதரவாளா்கள் நடத்திய தாக்குதலும், அதைத் தொடா்ந்து ஆளும்கட்சியினா் மீது நடத்தப்படும் தாக்குதலும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து வன்முறை குறித்தும் அதிகாரிகள் சுதந்திரமாக, முழுமையாக, வெளிப்படையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். வன்முறைக்கு காரணமானோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சமூக-பொருளாதார பிரச்னைகளுக்கு உரிய தீா்வு காணும்பொருட்டு சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடனும் இலங்கை அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.

போராட்டக்காரா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நியூயாா்க்கை தளமாக கொண்டு செயல்படும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அதன் தெற்காசியா இயக்குநா் மீனாட்சி கங்குலி வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், அமைதியான வழியில் போராட்டம் நடத்தியோா் மீது இலங்கை அரசால் ஏவப்பட்ட வன்முறை அபாயகரமான சூழ்நிலையை ஏற்படுத்தி வன்முறைக்கு வித்திட்டது. அமைதியான வழியில் போராட்டம் நடத்துவோரின் உரிமையை பாதுகாப்புப் படைகள் முழுமையாக காப்பது முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.