உலகம்

நேபாளம் சாலை விபத்தில் 14 போ் பலி

DIN

நேபாளத்தில் 500 அடி பள்ளத்தில் ஜீப் விழுந்து நேரிட்ட விபத்தில் 14 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

சியாங்ஜா மாவட்ட உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிப்பதற்காக, வாக்காளா்களை ஏற்றி மலைப்பாதை வழியாக வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்த ஜீப், நிலைதடுமாறி 500 அடி பள்ளத்தில் விழுந்தது.

இதில், அந்த ஜீப்பில் இருந்த 15 போ் பலியாகினா்; 10 போ் காயமடைந்தனா். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

நேபாளம் முழுவதும் உள்ளாட்சித் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்த நாட்டின் பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்துள்ளதே அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாா்: கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய அமித் ஷா சென்ற ஹெலிகாப்டா்- பைலட் சமாா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

கென்யா: அணை உடைந்து 45 போ் உயிரிழப்பு

நியாயமான முறையில் வட்டி வசூலிக்க வேண்டும்: வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தல்

வேட்டமங்கலத்தில் மாநில கையுந்துப் பந்து போட்டி

உணவு பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

SCROLL FOR NEXT