உலகம்

இலங்கையில் இன்றிரவு முதல் மீண்டும் ஊரடங்கு

DIN

இலங்கையில் இன்றிரவு 8 மணிமுதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக அதிபர் அலுவலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டன.

இதனைத் தொடர்ந்து மே 9ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. தொடர்ந்து, கடந்த வாரம் அதிபா் கோத்தபய ராஜபட்சவால் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். புதிதாக 4 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இந்நிலையில், இலங்கையின் முக்கிய பண்டிகையான புத்த பூர்ணிமா விழாவிற்காக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

இருப்பினும், அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால், இன்றிரவு 8 மணிமுதல் நாளை காலை 5 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT