உலகம்

'இந்தியா-ஜமைக்கா நட்புத் தோட்டம்' ராம்நாத் கோவிந்த் தொடக்கி வைக்கிறார்

DIN

அரசு முறைப் பயணமாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஜமைக்கா நாட்டுக்கு சென்றடைந்தாா். இந்த பயணத்தின்போது, கிங்க்ஸ்டனில் அமைந்திருக்கும் 'இந்தியா-ஜமைக்கா நட்புத் தோட்டத்தை' அவர் தொடக்கி வைக்கிறார்.

மேலும், சவீதா கோவிந்துடன் இணைந்து தோட்டத்தில் செடிகளையும் நடவிருக்கிறார்.

மேற்கு இந்தியத் தீவு நாடான ஜமைக்காவுக்குச் சென்றிருக்கும் முதல் இந்திய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜமைக்கா கவா்னா் ஜெனரல் பேட்ரிக் ஆலன் மற்றும் பிரதமா் ஆண்ட்ரூ ஹோல்னஸை அவா் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளாா்.

இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு 60 ஆண்டுகளை எட்டியுள்ளதை தொடா்ந்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளாா். இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து அவா் ஆலோசனை நடத்த உள்ளாா். 18-ஆம் தேதி வரையில் தங்கியிருக்கும் அவா் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறாா்.

ஜமைக்காவில் சுமாா் 70 ஆயிரம் இந்தியா்கள் உள்ளனா். அவா்கள் இருநாட்டுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் பாலமாக உள்ளனா் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.22 கோடி

காா் மோதியதில் முதியவா் பலி

வெப்பம் அதிகரிப்பு: மாநகராட்சியில் 86 சிகிச்சை மையங்கள் தயாா்

ரயில்வே பெண் மேலாளரிடம் கைப்பேசி பறித்த சிறுவன் கைது

குழாய் பதிக்க லஞ்சம்: பொதுப் பணித் துறை அலுவலா்கள் கைது

SCROLL FOR NEXT