முகப்பு
உலகம்

தகவல்கள் விற்பனை: ரூ.1,165 கோடி அபராதம் செலுத்த டிவிட்டர் முடிவு

பயனர்களின் தகவல்களைக் காக்க தவறியதற்காக  விதிக்கப்பட்ட ரூ.1,165 கோடி அபராதத்தை செலுத்த டிவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
கோப்புப்படம்
பகிர்:

பயனர்களின் தகவல்களைக் காக்க தவறியதற்காக  விதிக்கப்பட்ட ரூ.1,165 கோடி அபராதத்தை செலுத்த டிவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

2013 - 2019 ஆம் ஆண்டு வரை டிவிட்டர் நிறுவனம் தன் பயனாளர்களிடமிருந்து தகவல்களை பாதுகாப்பதாகக் கூறி செல்போன் எண், இமெயில் கணக்கு ஆகியவற்றை பெற்று பின் அவற்றை நிறுவனங்களுக்கு விற்றுவிட்டத்தாக புகார் எழுந்தது.

இந்த வழக்கை விசாரித்த அமெரிக்காவின் தேசிய வணிக ஆணையம் தனிநபர்களின் தகவல்களை பாதுகாக்க தவறியதற்காக அரசுக்கு டிவிட்டர் நிறுவனம் 150 மில்லியன் டாலர்களை (ரூ.1,165 கோடி) அபராதமாக வழங்க உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், தற்போது டிவிட்டர் நிறுவனம் அமெரிக்க அரசுக்கு அபராதத் தொகையை வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →