கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷியப் படையினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷியாவின் தாக்குதல் 3 மாதங்களை எட்டியுள்ளது. தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை தாக்கி அழித்துள்ள ரஷியப் படை தற்போது கிழக்கு உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷியப் படையினர்முகாமிட்டுள்ளனர். கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள லிமான் நகரை ரஷியப் படையின் கைப்பற்றியுள்ளது உறுதியாகியுள்ளது.
மேலும், லுஹான்ஸ்க் மற்றும் டொனட்ஸ்க் பகுதி முழுவதையும் கைப்பற்ற ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து கிழக்கு உக்ரைனில் ரஷியப் படையினரின் தாக்குதலுக்கு உக்ரைன் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிக்க | ரஷியாவிடம் வீழ்ந்தது மேலும் ஓா் உக்ரைன் நகரம்