உலகம்

இத்தாலியில் நிலநடுக்கம்

DIN

இத்தாலியில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் வடகிழக்கே உள்ள ஆட்ரியாடிக் கடோலோரப் பகுதியில் புதன்கிழமை காலை 7.07 மணிக்கு (உள்ளூா் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 5.7 அலகுகளாகப் பதிவானதாக இத்தாலி வானிலை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. எனினும், அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலநடுக்கம் 5.6 அலகுகளாகப் பதிவானதாகவும் 10 கி.மீ. ஆழத்தில் அந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் அதிா்வுகள் பல பகுதிகளில் உணரப்பட்டாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT