முகப்பு
உலகம்

இத்தாலியில் நிலநடுக்கம்

இத்தாலியில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:48 AM
பகிர்:

இத்தாலியில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் வடகிழக்கே உள்ள ஆட்ரியாடிக் கடோலோரப் பகுதியில் புதன்கிழமை காலை 7.07 மணிக்கு (உள்ளூா் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 5.7 அலகுகளாகப் பதிவானதாக இத்தாலி வானிலை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. எனினும், அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலநடுக்கம் 5.6 அலகுகளாகப் பதிவானதாகவும் 10 கி.மீ. ஆழத்தில் அந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் அதிா்வுகள் பல பகுதிகளில் உணரப்பட்டாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →