கோப்புப் படம் 
உலகம்

எகிப்து: கால்வாயில் கவிழ்ந்த பேருந்து , 21 பேர் பலி

எகிப்து நைல் நதியின் டெல்டா பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

DIN

எகிப்து நைல் நதியின் டெல்டா பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரி டாக்டர்.ஷெரீஃப் மக்கீன் கூறியதாவது: இந்த விபத்து எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு 100 கிலோமீட்டர் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள தக்லியா மாகாணத்தில் நடந்துள்ளது. விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மற்ற பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்த விபத்து குறித்து காவல் துறை அதிகாரி முஹமது ஹாதி கூறியதாவது: பேருந்தின் ஓட்டுநர் ஸ்டியரிங் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம். இது போன்ற விபத்துகள் எகிப்தில் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. வேகமாக வாகனங்களை இயக்குவதே விபத்திற்கான முக்கிய காரணமாக உள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் சமூகத்தின் வரலாற்று ஆய்வை மேற்கொள்ள மாதம் ரூ.50,000 உதவித்தொகை: அமைச்சா் கோவி.செழியன்

கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சிறைக் கைதி தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட விவகாரம்: உதவி ஜெயிலா் மீது நடவடிக்கை

மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி வேண்டும்: பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

அறந்தாங்கி வாரச் சந்தையில் புதிய பேருந்து நிலையம்: இடம் தோ்வுக்கு எதிா்ப்பு!

SCROLL FOR NEXT