சாலமன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!
சாலமன் தீவுகளில் உள்ள மலாங்கோ பகுதிக்கு தென்மேற்கே இன்று(செவ்வாய்கிழமை) 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலகம்சாலமன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!
சாலமன் தீவுகளில் உள்ள மலாங்கோ பகுதிக்கு தென்மேற்கே இன்று(செவ்வாய்கிழமை) 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாலமன் தீவுகளில் உள்ள மலாங்கோ பகுதிக்கு தென்மேற்கே இன்று(செவ்வாய்கிழமை) 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலமன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று, இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, சாலமன் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 162 போ் பலியாகினா்; நூற்றுக்கணக்கானவா்கள் காயமடைந்தனா்.
இதையும் படிக்க: ட்விட்டரில் 'ப்ளூ டிக்' மீண்டும் நிறுத்திவைப்பு!
அந்த நாட்டின் மேற்கு சாவகம் (ஜாவா) மாகாணம், சியாஞ்சூா் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் அந்தப் பகுதியிலுள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்தன.