உலகம்

காந்தி பிறந்தநாள்: உலக நாடுகளுக்கு ஐ.நா சபை அறிவுரை

DIN

மகாத்மா காந்தியடிகளின் 154வது பிறந்தநாள் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இன்று (ஆக.2) விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஐக்கிய நாடுகள் சபையில் 2007ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி காந்தி பிறந்தநாள், வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் காந்தி பிறந்தநாளையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், வன்முறைக்கு எதிரான நாளான இன்று காந்தி பிறந்தநாளையும், அமைதியின் மதிப்பையும் நாம் கொண்டாடும். அனைவருடன் பகிர்ந்துகொண்ட மரியாதையையும், கண்ணியத்தையும் கொண்டாடுகிறோம்.  

இவற்றிற்கு மதிப்பளிப்பதன் மூலம் அனைத்து கலாசாரம் மற்றும் எல்லைகளில் நிலவும் இன்றைய சவால்களை எதிர்கொண்டு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இயலும் எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT