முகப்பு
உலகம்

நைஜீரியாவில் நேரிட்ட படகு விபத்தில் 76 பேர் பலி

நைஜீரியாவின் அனம்பரா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட மிக மோசமான படகு விபத்தில் சிக்கி 76 பேர் பலியாகினர்.

Updated On : 10 அக்டோபர், 2022 at 4:00 PM
நைஜீரியாவில் நேரிட்ட படகு விபத்தில் 76 பேர் பலி
பகிர்:


அபுஜா: நைஜீரியாவின் அனம்பரா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட மிக மோசமான படகு விபத்தில் சிக்கி 76 பேர் பலியாகினர்.

85 பேரை ஏற்றிக் கொண்டு படகு வந்து கொண்டிருந்த போது திடீரென வெள்ளம் அதிகரித்ததால், படகு மூழ்கி அதில் இருந்த 76 பேர் பலியாகியுள்ளனர். இந்த படகு விபத்துக்கு நைஜீரிய அதிபர் முகமது புஹாரி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், நைஜீரிய அரசின் சார்பில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மேலும், இதுபோன்ற படகுப் பயணங்களின் போது மேற்கொள்ள வேண்டிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் உருவாக்கி கடைபிடிக்கவும் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.