அபுஜா: நைஜீரியாவின் அனம்பரா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட மிக மோசமான படகு விபத்தில் சிக்கி 76 பேர் பலியாகினர்.
85 பேரை ஏற்றிக் கொண்டு படகு வந்து கொண்டிருந்த போது திடீரென வெள்ளம் அதிகரித்ததால், படகு மூழ்கி அதில் இருந்த 76 பேர் பலியாகியுள்ளனர். இந்த படகு விபத்துக்கு நைஜீரிய அதிபர் முகமது புஹாரி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதையும் படிக்க | வழிகிற தேவனும் சாக்லேட் வர்மனும் - யாருடைய பொன்னியின் செல்வன் இவன்?
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், நைஜீரிய அரசின் சார்பில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மேலும், இதுபோன்ற படகுப் பயணங்களின் போது மேற்கொள்ள வேண்டிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் உருவாக்கி கடைபிடிக்கவும் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.