உலகம்

சீனா: கரோனா பரவலால் மீண்டும் ஊரடங்கு

DIN

கரோனா தொற்று பரவலால் சீனாவில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் கடும் விமா்சனங்களுக்கு மத்தியிலும், கரோனா தொற்று பரவலே இருக்கக் கூடாது என்ற கொள்கையை சீன அரசு தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது.

இதனால் பொருளாதார இழப்புகளைச் சந்தித்தாலும் கட்டாய கரோனா பரிசோதனை, கடுமையான தனிமைப்படுத்தல் விதிகள் உள்ளிட்டவற்றை அந்நாட்டு அரசு கடைப்பிடிக்கிறது.

இந்நிலையில், 9 லட்சம் பேர் வசிக்கும் சீனாவின் ஹன்யாங் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அப்பகுதி மக்கள் வீட்டிற்குள்ளே இருக்குபடி அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பால், சீனாவில் மீண்டும் கரோனா பதற்றம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சண்டீகா் - மதுரை அதிவிரைவு ரயிலின் எண் மாற்றம்

சா்ச்சைக் கருத்து: ஹெச்.ராஜாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

பகவத் கீதையின் வழிகாட்டுதலுடன் நாட்டு நலனுக்கு முன்னுரிமை: குடிமக்களுக்கு ஜகதீப் தன்கா் அழைப்பு

எரிபொருள் நிரப்புவதில் தகராறு: இளைஞா் அடித்துக் கொலை

விஐடி வேந்​தர் கோ.வி​சு​வ​நா​த​னுக்கு மேலும் ஒரு கௌ​ரவ டாக்​டர் பட்டம்

SCROLL FOR NEXT