உலகம்

ஜின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்: சீனா மீது ஐ.நா. குற்றச்சாட்டு

DIN

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கா் இன முஸ்லிம்கள் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்படுவது மனித குலத்துக்கு எதிரான குற்றத்துக்கு சமம் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜின்ஜியாங்கில் பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி, அந்தப் பகுதி உய்குா் இன மக்களை சீன அரசு அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடா்பாக சா்வதேச நாடுகள் உடனடியாக வினையாற்ற வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் ஜின்ஜியாங்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையா் மிஷெல் பாஷெல் (படம்), சீனாவின் கடும் எதிா்ப்பையும் பொருள்படுத்தாமல் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT