உலகம்

ஆப்கனில் மசூதியில் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி

ஆப்கனில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 20 பேர் பலியானார்கள்.  

DIN

ஆப்கனில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 20 பேர் பலியானார்கள். 

மேற்கு ஆப்கனின் ஹெராத் நகரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமையையொட்டி தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது மசூதியில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 20 பேர் பலியானார்கள். 

மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தலிபான் தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தாக்குதலில் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சமீபத்திய மாதங்களில் ஆப்கனில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கர்பா குயின்... அனன்யா!

மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸி. பந்துவீச்சு!

பூங்காற்றுத் திரும்புமா.... மான்யா!

முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித் ஷா கருத்து: காங். கடும் கண்டனம்!

எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண்!

SCROLL FOR NEXT