முகப்பு
உலகம்

அமெரிக்கா: விமானம் மூலம் தாக்குதல் மிரட்டல் விடுத்தவர் கைது

அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த மர்மநபர் கைதுசெய்யப்பட்டார்.

Updated On : 3 செப்டம்பர், 2022 at 9:55 PM
பகிர்:

அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த மர்மநபர் கைதுசெய்யப்பட்டார்.

அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணத்தில் டியுபுலோ வால்மார்ட் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தைத் தகர்க்கப் போவதாகக் கூறி கடத்தப்பட்ட விமானத்திலிருந்து மர்ம நபர் எச்சரிக்கை விடுத்து வந்தார்.

இந்நிலையில், கடத்தப்பட்ட விமானத்தைக் கொண்டு வணிக வளாகத்தை சுற்றி வட்டமிட்டுவந்த அவருடன் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், எரிபொருள் தீர்ந்ததால் விமானத்தை தரையிறக்கியபோது இளைஞர் உடனடியாக கைதுசெய்யப்பட்டார்.

எதற்காக தாக்குதல் மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.