பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உடல்நலக்குறைவால் பிரிட்டன் மகாராணி எலிசபெத் கடந்த 8ஆம் தேதி காலமானார். அவரது உடல் லண்டனில் நாடாளுமன்ற வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் அஞ்சலிக்காக கடந்த புதன்கிழமை முதல் வைக்கப்பட்டிருந்தது.
அவரது உடலுக்கு கடந்த ஐந்து நாள்களாக லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்றனர்.
இறுதிச் சடங்கிற்காக மகாராணி எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸடரிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டா் அபேக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னா், விண்ட்ஸருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரின் கணவா் இளவரசா் பிலிப் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகே அடக்கம் செய்யப்பட்டது.
மகாராணி எலிசபெத்தி இறுதிச்சடங்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.