முகப்பு
உலகம்

நியூசிலாந்தில் முதல் குரங்கம்மை நோய் பாதிப்பு

நியூசிலாந்தில் முதன் முறையாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
கோப்புப் படம்
பகிர்:

நியூசிலாந்தில் முதன் முறையாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஆக்லாந்தில் வசிக்கும் 30 வயதான நபருக்கு குரங்கு அம்மை நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர் வெளிநாட்டின் பயணத்திற்குப் பிறகு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்னும் சமூகத்தொற்று நாட்டில் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் குரங்கம்மை நோயை கண்டறியும் பிசிஆர் சோதனையை நியூசிலாந்து நாட்டிலே கண்டறிந்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. 

நோய்த்தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்தால் உடனே சோதனை செய்துக் கொள்ள வேண்டுமென அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.