கோப்புப் படம். 
உலகம்

கிரீஸில் படகு கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி!

கிரீஸின் ஏஜியன் கடலில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 

DIN

கிரீஸின் ஏஜியன் கடலில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 

சமோஸ் தீவில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த பெண் மற்றும் குழந்தை பலியாகினர். மேலும் 35 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. 

இதேபோன்று மற்றொரு படகு லெஸ்வோஸ் தீவில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றபோது கடலில் மூழ்கியது. இதில் 11 மாதக் குழந்தை, 8 வயது சிறுமி, உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். 18 பேர் மீட்கப்பட்டனர். 

ஏஜியன் கடலில் நாளொன்றுக்கு 150 - 200 பேர் வருகை தருகின்றனர். ஆகஸ்ட் 1 மற்றும் 20-வரை சுமார் 1,172 அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடலில் மீட்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT