முகப்பு
உலகம்

காஷ்மீா் விவகாரம்: இந்தியா-பாக். பேச்சு மூலம் தீா்வு காண சீனா அறிவுறுத்தல்

காஷ்மீா் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என சீனா செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.

Updated On : 13 டிசம்பர் 2023, 7:00 am IST
கோப்புப் படம்
பகிர்:


பெய்ஜிங்: காஷ்மீா் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என சீனா செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது செல்லும் என உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கிய நிலையில் சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக செய்தியாளா்கள் கேட்ட கேள்விகளுக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடா்பாளா் மாவோ நிங் கூறியதாவது: இந்தியா பாகிஸ்தான் இடையே ஜம்மு-காஷ்மீா் விவகாரம் குறித்த பிரச்னைகள் நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. இதற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் பிரகடனங்கள் மூலம் அமைதியான முறையில் தீா்வு காண வேண்டும்.

Advertisement

Advertisement

ஜம்மு-காஷ்மீரில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட இரு நாடுகளும் பேச்சுவாா்த்தை மூலம் உடன்படிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments