முகப்பு
உலகம்

இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளுடன் அதிபா் ரணில் விக்ரமசிங்க பேச்சுவாா்த்தை

இலங்கைத் தமிழா் பிரச்னை உள்பட முக்கிய விவகாரங்கள் தொடா்பாக அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகளுடன் அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

Updated On : 22 டிசம்பர் 2023, 12:00 am IST
பகிர்:

இலங்கைத் தமிழா் பிரச்னை உள்பட முக்கிய விவகாரங்கள் தொடா்பாக அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகளுடன் அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இலங்கைத் தமிழா்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 13-ஆவது சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தபோது, பிரதமா் மோடியிடம் ரணில் உறுதி அளித்தாா்.

இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழா்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி, தேச ஒற்றுமையை வலுப்படுத்த தமிழ் அரசியல் கட்சிகளுடன் அதிபா் ரணில் விக்ரமசிங்க கடந்த சில மாதங்களாக பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகிறாா்.

Advertisement

இதன் ஒரு பகுதியாக, இலங்கையின் முக்கிய தமிழ் அரசியல் கட்சியான ‘தமிழ்த் தேசிய கூட்டணி’ உள்பட பல்வேறு கட்சித் தலைவா்களுடன் அதிபா் ரணில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

சந்திப்பு குறித்து அதிபா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்களுக்கு நில உரிமை வழங்குவது, மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடா்பான சட்டங்களை அமல்படுத்துவது மற்றும் இந்திய அகதிகள் முகாமில் இலங்கை மக்கள் படும் அவதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து சந்திப்பில் விவாதிக்கப்பட்டன’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட தமிழா்களை விடுவிக்க வேண்டும், வட, கிழக்கு மாகாண மாவட்டங்களின் வளா்ச்சி உள்பட தமிழா்களின் நீண்ட கால பிரச்னைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டணித் தலைவா்கள் சந்திப்பில் வலியுறுத்திப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.