அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி
அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் பலியாகினர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் பலியாகினர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் இரண்டு இடங்களில் நடத்தப்பட்டது. மேலும், காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மாணவர்கள், ஆசிரியர்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்கலைக்கழக வகுப்புகள் மற்றும் செயல்பாடுகள் அடுத்த 48 மணி நேரத்திற்கு ரத்து செய்யப்படும் என்று பல்கலைக்கழக காவல் துறையினர் தெரிவித்தனர்.