முகப்பு
உலகம்

வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய செய்தியை திருத்தம் செய்யலாம்: விரைவில் வருகிறது புதிய வசதி

வாட்ஸ் ஆப் செயலியில் அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்யும் வசதியை அந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:35 AM
கோப்புப்படம்
பகிர்:

வாட்ஸ் ஆப் செயலியில் அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்யும் வசதியை அந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ்ஆப் செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்ஆப் செயலி அவ்வப்போது புதியபுதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். 

அதன்படி பயனர்களின் உபயோகத்திற்காக புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி தங்களது நண்பர்களுக்கு அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி  அனுப்பிய செய்தியை 15 நிமிடத்திற்குள்ளாக திருத்தம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வசதி சோதனை ஓட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் வாட்ஸ்ஆப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →