முகப்பு
உலகம்

2 ஹெலிகாப்டா்கள் நேருக்குநேர் மோதி விபத்து: 4 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் இன்று(திங்கள்கிழமை) இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிய நேருக்குநேந் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.

Updated On : 2 ஜனவரி, 2023 at 4:57 PM
பகிர்:

ஆஸ்திரேலியாவில் இன்று(திங்கள்கிழமை) இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிய நேருக்குநேந் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் வடக்கு கடற்கரையில் இந்த சம்பவம் நடைபெற்றது. கோல்ட் கோஸ்ட் கடற்கரையானது ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும், இங்கு ஜனவரியில் கூட்டமாக அதிகமாக இருக்கும். 

ஒரு ஹெலிகாப்டர் சுற்றுளா தளத்தில் புறப்பட்டது. மற்றொரு ஹெலிகாப்டர் தரை இறங்கும் போது, 2 ஹெலிகாப்டா்கள் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

Advertisement


இவ்விபத்தை அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.