முகப்பு
உலகம்

இலங்கையில் பயணிகள் ரயில் மோதி 3 யானைகள் பலி: இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு!

இலங்கையில் கொழும்பு-மட்டக்களப்பு வழியாக சென்று பயணிகள் ரயில் மோதியதில் 3 யானைகள் பலியாகின. ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு நிலவியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:42 PM
கோப்புப் படம்
பகிர்:


இலங்கையில் கொழும்பு-மட்டக்களப்பு வழியாக சென்று பயணிகள் ரயில் மோதியதில் 3 யானைகள் பலியாகின. ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு நிலவியது.

இலங்கை கொழும்பு - மட்டக்களப்பு இடையேயான ரயில் தடத்தில் வெள்ளிக்கிழமை பயணிகள் ரயில் அதிகாலை 2 மணியளவில் வந்துகொண்டிருந்தது. அப்போது ரயில் தடத்தில் குறுக்கே வந்த யானைகள் மீது ரயில் மோதியது. இதில், 3 யானைகள் சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும், பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது. 

அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் கொழும்பு-மட்டக்களப்பு இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  ரயில்வே பணியாளர்கள் ரயில் பாதையை சரி செய்யும் பணியில் ஊடுபட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →