இலங்கையில் கொழும்பு-மட்டக்களப்பு வழியாக சென்று பயணிகள் ரயில் மோதியதில் 3 யானைகள் பலியாகின. ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு நிலவியது.
இலங்கை கொழும்பு - மட்டக்களப்பு இடையேயான ரயில் தடத்தில் வெள்ளிக்கிழமை பயணிகள் ரயில் அதிகாலை 2 மணியளவில் வந்துகொண்டிருந்தது. அப்போது ரயில் தடத்தில் குறுக்கே வந்த யானைகள் மீது ரயில் மோதியது. இதில், 3 யானைகள் சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும், பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது.
இதையும் படிக்க | எஸ்பிஐ வங்கியில் சு.வெங்கடேசன் எம்.பி. உள்ளிருப்புப் போராட்டம்!
அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் கொழும்பு-மட்டக்களப்பு இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணியாளர்கள் ரயில் பாதையை சரி செய்யும் பணியில் ஊடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.