உலகம்

நேபாளத்தில் ஓடுபாதையில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து!

DIN


காத்மாண்ட்: நேபாளத்தில் ஓடுபாதையில் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்ட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்ரா சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம் 68 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் செல்லும்போது விழுந்து விபத்துக்குள்ளானது.  

இதில், விமானம் முழுவதும் தீப்பிடித்து தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. 

விமானத்தில் இருந்து 68 பயணிகள், நான்கு விமான ஊழியர்கள் என 72 பேரின் நிலைமை கவலைக்குரியதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT