இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவு!
இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில், அதிகாலை கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.0அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கம் ஆக்சே மாகாண கடலோர மாவட்டமான சிங்கில் இருந்து தென்கிழக்கே 48 கிலோ மீட்டர் ஆழத்தில் நிகழ்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மேயம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள்சேதம் குறிந்த எந்த தகவலும் இதுவரை வெளியாகிவில்லை.
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.