உலகம்

பெஷாவர் மசூதி குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு

பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் காவல் நிலையம் அருகே உள்ள மசூதியில் இன்று பிற்பகல் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. மனித வெடிகுண்டாக வந்த நபர், மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மசூதியில் தொழுகையின்போது முன் வரிசையில் இருந்த நபரின் மூலம் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. அப்போது மசூதியில் 120க்கும் அதிகமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். தற்கொலைப்படையின் இந்த கொடூர செயலுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மீட்பு பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமநாதசுவாமி கோயில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வென்ற பள்ளி அணிகளுக்கு பரிசளிப்பு

ஆடுதுறை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

தகாத உறவில் பிறந்த ஆண் சிசு உடல் மீட்பு

திறன் இயக்க 2-ஆம் கட்ட பகுப்பாய்வு: நான்காம் இடத்துக்கு சறுக்கியது திருச்சி மாவட்டம்!

SCROLL FOR NEXT