ஐஸ்லாந்தில் 24 மணி நேரத்தில் 2,200 முறை நிலநடுக்கம்!
ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜாவிக் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜாவிக் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதில் 7 நிலநடுக்கங்கள் லேசான நிலநடுக்கமாக கருதப்பட்டு, ரிக்டர் அளவில் 4-ஆக பதிவானது. நில அதிர்வு நடவடிக்கையின் விளைவாக விமான எச்சரிக்கை பச்சை நிறத்திலிருந்து ஆரஞ்சு ஆக மாற்றப்பட்டது.
எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்பதற்கான அறிகுறி இதுவென்று ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில் ஐஸ்லாந்தின் தென்மேற்கு பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், அங்கு மேலும் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.