உலகம்

பிலிப்பின்ஸில் பயணிகள் படகு கவிழ்ந்து 30 பேர் பலி!

DIN

பிலிப்பின்ஸின் தலைநகருக்கு அருகிலுள்ள ஏரியில் படகு கவிழ்ந்ததில் 30 பேர் பலியானதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பினன்ஹொன் நகரிலிருந்து ஏரி வழியாக தலிம் துவிற்கு பயணிகள் படகு பயணம் மேற்கொண்ட நிலையில், படகில் 70 பயணிகள் பயணித்தனர். இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

ரியில் படகு சென்றுகொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பயணிகள் அனைவரும் படகின் ஒரே பக்கத்திற்கு வந்ததால் எடை அதிகரித்தது. இந்நிலையில் நிலை தடுமாறிய படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில், படகில் பயணித்த அனைவரும் ஏரியில் மூழ்கினர். விபத்து குறித்து தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

படகில் பயணித்த பயணிகள் யாரும் கவச உடை அணியவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். 30 பேர் பலியான நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீன்பிடி தடைக்காலம்: உக்கடம் சந்தைக்கு மீன்வரத்து குறைவு

ஏலகிரி மலையில் காவலா் குடியிருப்புகள் அமைக்கப்படுமா?

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் தினம்

ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்

மோடி அலை: 400-ஐ கடக்கும் பாஜக கூட்டணி- அமித் ஷா சிறப்பு பேட்டி

SCROLL FOR NEXT