உலகம்

சீனாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 

DIN


சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த நிலச்சரிவு லெஷான் நகருக்கு அருகே உள்ள ஜிங்கூஹே வட்டாரத்தில் இருக்கும் அரசுக்குச் சொந்தமான வன நிர்வாகப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 6 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலச்சரிவில் நேற்று 14 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். 

சம்பவ இடத்தில் மீட்பு உபகரணங்கள் பயன்படுத்தி மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. 

வனப்­ப­கு­தி­களை அதி­க­மா­கக் கொண்ட சீச்­சு­வான் மாகாணத்தில் அடிக்­கடி இயற்­கைப் பேரி­டர்­கள் நிகழ்­ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமநாதபுரத்துக்கு 9 முக்கிய அறிவிப்புகள்!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை: சென்சார் பதிந்த கால்பந்து அறிமுகம்!

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்: உயிரைப் பணயம் வைத்து மீட்ட ரயில்வே காவலர்

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

கரூர் பலி: சிபிஐ விசாரணை கோரிய பாஜக கவுன்சிலர் மனு நிராகரிப்பு!

SCROLL FOR NEXT