உலகம்

சூடானில் முதல்முறையாக முழு அமைதி

சூடானில் சண்டையிட்டு வரும் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே ஏற்பட்டுள்ள 24 மணி நேர சண்டை நிறுத்தத்துக்குப் பிறகு அங்கு சனிக்கிழமை முழு அமைதி நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

சூடானில் சண்டையிட்டு வரும் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே ஏற்பட்டுள்ள 24 மணி நேர சண்டை நிறுத்தத்துக்குப் பிறகு அங்கு சனிக்கிழமை முழு அமைதி நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தலைநகா் காா்ட்டூமில் வசிக்கும் ஹமீத் இப்ராஹிம் என்பவரை மேற்கோள் காட்டி ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறுகையில், சனிக்கிழமை முழுவதும் நகரில் ஒரு குண்டு சப்தம் கூட கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில், இதுவரை சுமாா் 1,800 போ் பலியாகியுள்ளா்.

மோதல் தொடங்கியதற்குப் பிறகு பல முறை சண்டை நிறுத்த அறிவிப்புகள் வெளியாகியிருந்தாலும், சனிக்கிழமைதான் முதல்முறையாக முழு அமைதி நிலவியதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT